எனதும்,உனதும்..! பொள்ளாச்சி அபி
எனக்குண்டான எல்லாமும்
உனக்கும் கிடைக்கும்,
நான் சுவாசிக்கும் காற்று
எனது விழியி;ல் விழும் ஒளி
நான் நனையும் மழை
இளைப்பாறும் நிழல்
காற்றில் மிதக்கும் பாட்டு
கனவில் வந்த சூழல்
இப்படி…,
அதனால் மட்டும்
என்னுடையது எல்லாம்
உன்னுடையது என்று
உரிமை பாராட்டாதே…,
எனது சுதந்திரம் உட்பட….!