வா..காத்திருக்கிறேன்.!-பொள்ளாச்சி அபி
உனது பலிபீடத்தின்
இன்னொரு இரை
இங்கே இருக்கிறது.
தெய்வம் நீயென்று
உன்காலடியில் நின்றதற்கு
உனது நிழலே இருட்டறையானது.
எனதுவாழ்விற்கான மந்திரங்கள்
சொல்கிறாய் என நம்பியதற்கு
அவையனைத்தும்
சாபங்களேயென்று
புரியாமல் போனது.
தெய்வங்களின் வாடிக்கை
இதுவென்று தெரியாமல்
ஏமாந்தது என்குற்றமா.?
பரவாயில்லை..கத்தியை
பதமாய்த் தீட்டிக்கொள்
கழுத்தின்மீது வெட்டிக்கொல்.
சிந்தும் இரத்தத்தை
சிலையின்மீது தெளித்துக்கொள்.
இரையாய்என்னை மாற்றிவிடு
இரைப்பையை நிரப்பிவிடு
இறையை மட்டும் விட்டுவிடு..!
இதயமிருந்தால் திருந்திவிடு..!