தவிர்க்க இயலா

வண்ணத்துப்பூச்சியாய்
பறக்கும் என நினைத்த
ஓர் இளந்தளிர்
கம்பளிப்புழுவாய்
அடைகாக்கும்
காலத்திலேயே
கண் மூடியது !

இரண்டு வய்தில்
இரத்தப்புற்று !
மருத்துவத்தால்
இயல்வில்லை
பிஞ்சுவைக் கனியாக்க1
உடலோடு இறுதி
ஊர்வலம் தான்
போக முடிந்தது !

விதி என்றான் நண்பன்!
இல்லை !இல்லை !
எத்தனையோ இன்னல்கள்
தவிர்த்த அறிவியல்
இதற்கும் ஒரு நாள்
விடையைச் சொல்லும்!
அது வரை
தவிர்க்க இயலா
இழப்புகளைத் தாங்கி
பின் மறப்பது தவிர
வேறு வழியில்லை !

எழுதியவர் : (30-Dec-11, 7:02 am)
பார்வை : 250

மேலே