எப்போது சந்திப்போம் தோழி ........

நான் மகிழ்ந்திருந்த
மலர்ந்த நாட்களின் ஞாபகத்திலேயே
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
காய்ந்த உலகத்தில் ........

நாம் இணைந்திருந்த
இனிய தருணங்களின் நினைவிலேயே
அசைந்து கொண்டிருக்கிறேன்
அன்பற்ற உலகத்தில் ........

நாம் பிரிவோம்
என்பதை
சொல்லிச் சென்ற
நீ ........

சொல்ல மறந்து விட்டாய்
மீண்டும் ,நாம்
என்று சந்திப்போம்
என்பதை .......

எப்போது அழைத்தாலும்
அன்பைப் பொழியும்
உன் அலைப்பேசி

இப்போதெல்லாம்கூறும்
ஒரே வார்த்தை
தாங்கள் அழைக்கும் நபர்
தற்போது தொடர்பில் இல்லை என்று ...

தோழியே
நீ ..தொடர்பு எல்லைக்கு
வெளியே இருந்தாலும் சரி

என்னை
தொடர்பு கொள்ளும் விருப்பம்
உனக்கு இல்லாதிருந்தாலும் சரி

தொடர்ந்து
முயற்சித்துக்
கொண்டிருப்பேன்

உன் அன்பை பெறவும்
அன்பான நம் நட்பை
தொடரவும் ........



நட்புடன்
ப. ராஜேஷ் .......

எழுதியவர் : ப.ராஜேஷ் (11-Jan-12, 4:07 pm)
பார்வை : 1766

மேலே