"அன்பில்லா காதலிக்கு ஆசையில்லா ஓர் கடிதம்"

என்னத்த சொன்னாலும்
என்ன தான் சொன்னாலும்

என்னப்பத்தி சொல்லத்தான்- நீ
என்னை பற்றி கொள்ளத்தான்

என்ன நான் சொல்ல
என்ன தான் சொல்ல,

காதல் என்னும் பாதையில
கால் ஊனி போகயில..,

என் இதயம் எனும் ஆழ்கடலில்
மூச்சடக்கி முக்குளிச்ச,
என் அன்புப் பால் வார்த்தையெல்லாம்
ஏன்? ஆசிட் ஊத்தி கொப்பளிச்ச,

நீ மோச வார்த்தை பேசினப்பின்
என் ஆச வார்த்தை ஏதுமில்ல,
நீ என்னை ஏசி பேசி போன வார்த்தை
என்னிடம் பேசாத வாதமில்ல,

பாச பாஷ பேசித்தானே
என்னோட பார் பூரா சுத்திட்ட,
நீ மோசம் செஞ்சி போனபின்னே
என்னை பைத்தியமா சுத்தவிட்ட...,

பிறந்த நாளப்போ கொடுத்த புது வாச்{watch}
பிரிஞ்சு போவன்னு அப்போ தெரியாம போச்சு..,

அப்பன் காலத்து காதலெல்லாம்
அரகொறையா நொடியலானது,
அவன்புள்ள என்காதல்
அவசரமா முடிஞ்சு போனது...,

கண்ண நம்பி பொறந்த காதல்
கண்ணோட செதஞ்சிடுச்சு..,
இந்த பொண்ண நம்பி போன
நெஞ்சு மண்ணோட பொதஞ்சிடுச்சு...,

உடல் மேல ஆசையில்லா
உரைகல்லு நான் தானே,
உதாசினப்படுத்தி உதறி தள்ளியும்
உன்பின்னே வந்தேனே..,

சந்தேக தீயினிலே முழுசா தான் மூழ்கிட்ட
சந்தேக பசிகொண்டு என் மனச
முழுசும் தான் முழுங்கிட்ட..,

ஆறு வருடம் உன்னை நினைத்து காதலித்தது
ஆறடி நிலத்தில் என்னை அள்ளி போடவா....
பரவாயில்லை என்னை அள்ளி போட வா....

"தோல்வியும் எனக்கு பிடிக்கும்
தோற்பது உன்னிடமென்றால்....!"

எழுதியவர் : நா.சதிஷ்குமார் (12-Jan-12, 7:14 pm)
பார்வை : 1076

மேலே