" யாரும் இத படிக்காதீங்க "

{{{{{{{{{{{{{{{{ மணமகள் தேவை }}}}}}}}}}}}}}}}

பழகுவதற்கு அரியவளாகவும்,
பைந்தமிழ் அறிந்தவளாகவும்,

பெரியோர்களை கண்டால்
எழுந்து நிற்பவளாகவும்,
எழுத்தறிவு மிக்கவளாகவும்,

அச்சம்! மடம்! அறிந்தவளாகவும்,
நாணம்! பயிர்ப்பு! படைத்தவளாகவும்,

அதிர்ஷ்ட எண்ணை எண்ணாமல்
என்னுடன் இருப்பதே அவள்
அதிர்ஷ்டம் என எண்ணும்
எண்ணம் கொண்டவளாகவும்,

தன் லட்சியத்தை என் லட்சியமாக்கவும்,
என் லட்சியத்தை தன் லட்சியமாகவும்,

துன்பம் தரும் சுற்றத்திற்கு
இன்பம் தரும் இனியவளாகவும்

முக பூச்சு இல்லா முழு மதியாகவும்,
முட்டாள் மூளையையும் முழு மதியாக்கவும்,

கவித்திறன் கொண்டவளாகவும்
கவிதையில் என்னை வென்றவளாகவும்,

குட்ட பாவாடையும் குறைவான
மேலாடையும் இல்லாதவளாகவும்,

பழைய சோறு திங்கும் என் குடும்பத்தில்ல்ல்ல்ல்

...........டே டே டே சதீஷ்.....????????
வா மாப்ள ஈஸ்வரா,,,,என்ன டா மாப்ள????

இப்போ நீ என்னத்த வெட்டி முறிச்சிட்டன்னு கல்யாணத்துக்கு பொண்ணு தேடுற...
அதுவும் இப்போ இந்த காலத்துல இப்படி ஒரு பொண்ணு எங்க இருக்காங்க அப்படி இருக்குறவங்களுக்குலாம் ஏற்கனவே கல்யாணம் ஆகி இருக்குமே டா....

ஏதோ கொஞ்சநஞ்ச பேரு இருக்காங்க ஆனா அவங்களுக்குலாம் உன்ன புடிக்காது அப்போ
எப்படி டா நீ இப்படி ஆச படுற...
இந்த மாதிரி பொண்ணுங்க இப்போலாம் சினிமால கூட வர்றது இல்ல அப்போ எப்படி டா நெஜத்துல கெடைக்கும்....

இதுக்கெல்லாம் ஒரு காரணம்
தான் டா ஈஸ்வரா ......
என்ன டா?????

எனக்கு காதல் என்ற மரண தண்டனைய விட
கல்யாணம் என்கிற ஆயுள் தண்டனை பரவால்லன்னு தோனுதுடா மாப்ள..

இரு இரு இந்த டயலாக்க யாரு சொல்லி கொடுத்தா????

அது வந்து மாப்ள....

ஏன் டா உனக்கு இந்த வேல இந்த எழுத்து இணைய தளத்துல தான் சிலபேர் இதே வேலையா திரியுராங்கன்னா உனக்கு என்ன டா....

அது என்ன மாப்ள இதே வேல?????

சிலபேர் மொக்க கவிதைய பக்கம் பக்கமா போடுறதும் அதுக்கு மார்க்கு வேற அவுங்களே போடுறதும் செம்ம காமெடி டா...

அப்பறம்...

நல்ல கவிதைக்கு கருத்து சொல்ல ஒருத்தனும் வர மாற்றான்
ஒரு பொண்ணு மொக்க கவிதைய add பண்ண உடனே அப்படி இப்படின்னு சும்மா கவிதையிலேயே கருத்த பிச்சு ஓதர்ரானுங்க பாரு...
அப்போ தான் எனக்கு பாரதி சொன்னது ஞாபகம் வரும் தமிழ் இனி மெல்ல சாகும்னு...

அட பாவிங்களா???
ஆமா டா மாப்ள இவங்க இப்படி பண்றதுனால சில நல்ல திறமையான கவிதைகள் கண்ணுக்கு தெரியாமலே போயிடுதுடா மாப்ள...

பின்ன ஒருத்தனே ஒரு பக்கத்த எடுத்துகிட்டா அடுத்த கவிதைகள் எல்லாம் தள்ள படாதா மாப்ள....

ஓகே டா மாப்ள அவங்களுக்கு ஏத்துக்குற மாதிரி ஒரு அட்வைஸ் பண்ணு டா....

நண்பர்களே.....
எழுத்துரிமை என்பது அவரவர்க்கே உரித்தான ஒன்று தான் அதை நீங்கள் தனித்துவத்தை வெளிப்படுத்தவே அன்றி பிறர் மனம் நோகும் படி காயப்படுத்தவோ கருத்து சொல்லவோ இல்லை,
உங்களுக்குள் கவித்திறமை தனித்திறமை பெற்று உள்ளது என்றால் உங்கள் தலையிலும் நம் எழுத்து இணையதளம் நிச்சயம் மகுடம் சூட்டும்...

முயற்சி செய்யுங்கள் தோழா...
உங்களலால் முடியாமல் வேறு யாரால் முடியும்...

"தட்டினால் திறக்கும் உலகமல்ல
இது உடைத்தால் மட்டுமே திறக்கும் உலகம்.
உணர்ச்சி உனக்கிருந்தால் உலகம் உன்கையில்,தோல்வி நிலையல்ல, வெற்றி வெகுதூரமல்ல.

தோல்வியை நேசி
வெற்றியின் விளிம்பு உன் விழியருகே தெரியும்.
உணர்ச்சியோடு போராடு உலகம் உனதே ....
அச்சம் தவிர், ஆற்றலை உயிராய்க்கொள்.

கடவுள்,ஜாதி, மதம்,இனம்,குலம்
இவை அத்தனையும் மறந்து, மறைந்து, ஒழிந்து
மனிதனை பற்றி மனிதன்
நினைக்கும் நாள் வந்தால் மட்டுமே
"மனிதநேயம்"
என்ற வார்த்தைக்கு உண்மையான அர்த்தம்
உள்ளத்தால் புலப்படும்......"

டே மாப்ள ஈஸ்வரா கலகிட்ட டா மாப்ள
எப்படி டா இப்படிலாம் பேசுற...

சரி இவ்ளோ பேசுனியே அவனுங்க கேப்பானுங்க??
கேட்பானுங்க டா...ஏன்னா???
நான்
அன்பா சொல்லி இருக்கேன்
அன்புக்கு எப்போதும் மதிப்பு உண்டு டா...

எழுதியவர் : நா.சதிஷ்குமார் (26-Jan-12, 5:21 pm)
பார்வை : 850

மேலே