தலைக் கொள்ளிகள்.!

தலையாட்டும் மரங்களை
வெட்டுவோம்.!

வண்ணமலர்களை மாலைகளாக
கசக்குவோம்.

வானத்தில் ஓசோனை
துளைப்போம்.

மேகத்தை நிறம்மாற்றி
அமில மழையாக்குவோம்.

வண்ணத்துப் பூச்சிகள் பறக்க
விண்ணகத்தில் தடையிடுவோம்.!

இயற்கையை இரக்கமில்லாமல்
சிதைக்கவந்த நாங்களென்ன
மனிதர்களா..? அல்ல
அவ்வுருவில் நடமாடும்
தலைக் கொள்ளிகள்.!

எழுதியவர் : பொள்ளாச்சி அபி (27-Jan-12, 1:12 pm)
பார்வை : 209

மேலே