தலைக் கொள்ளிகள்.!
தலையாட்டும் மரங்களை
வெட்டுவோம்.!
வண்ணமலர்களை மாலைகளாக
கசக்குவோம்.
வானத்தில் ஓசோனை
துளைப்போம்.
மேகத்தை நிறம்மாற்றி
அமில மழையாக்குவோம்.
வண்ணத்துப் பூச்சிகள் பறக்க
விண்ணகத்தில் தடையிடுவோம்.!
இயற்கையை இரக்கமில்லாமல்
சிதைக்கவந்த நாங்களென்ன
மனிதர்களா..? அல்ல
அவ்வுருவில் நடமாடும்
தலைக் கொள்ளிகள்.!