எங்கே நீ உறங்கினாய்!

நான் தூக்கத்தில்
கடித்து திங்க
உன் தாளித்தங்கம்,

என் கழுத்துக்கு
இதமாக
உன் கையில் உறக்கம்,

எப்பொழுது விழித்தாலும்
தலைகோதும் விரல்கள்,

அப்படியே பசித்தாலும்
எப்படிதான் சமைக்கிறாய்
அந்த நடு இரவில்,

ஒவ்வொரு படியாக
முயற்சித்து,
ஒரு டம்ளர்
நீரில் எழுப்பிவிடுகிறாய்,

உன் மகனுக்கு
முகம் கழுவும்
கஷ்டம் கூட தந்ததில்லை நீ.

எனக்கு முன்
எப்பொழுது விழிக்கிறாய்?
அட
எங்கே நீ உறங்கினாய்!

எழுதியவர் : எழுத தெரியாதவன் (29-Feb-12, 4:14 pm)
சேர்த்தது : எழுத தெரியாதவன்
பார்வை : 225

மேலே