தோளில் சாய்ந்துகொள்ள..
இன்னும் ஞாபகம்
இருக்கிறது,
உயரத்தில்
ஊரை சுற்றியது,
எட்டா சாமியை
எட்டி பார்த்தது,
சுடும் வெயிலிலும்
சுகமாய் நடந்தது,
மூழ்கடிக்கும் ஆற்றில்
முழுகாமல் தாமரை பிடித்தது,
எதிர்வீட்டு நாயிக்கு
எட்டாமல் நின்றது,
கவலைகள் மறந்து
கச்சிதமாய் தூங்கியது,
இன்றும் ஏங்குகிறேன்
என் தந்தையின்
தோளில் சாய்ந்துகொள்ள..