வீரமுழக்கமிடுவோம்!

இளமைததும்பும் புதுமை
சிந்தனை அரும்பிடும்
என்னன்பின் சுடர்விளிகளே!
சமதர்மதுக்காக இசைபெருயுத்தங்களை எழுப்பிடும் வீணைகளே!
நம்பிக்கையின் நாணல்களே!
இந்நானிலத்தில் நல்லதோர்
அற்பததைதேடும் தேனீக்களே!
அன்பின் கூடாரமாய் விளங்கும்
என்னிதயத்தின் ஏகாந்தங்களே
தன்னிகரில்லா ஒப்புமையை தேடும்
அசுரபலம்கொண்ட அச்சாணிகளே!
சத்தியத்தை அகிலமெல்லாம்
சாத்தியமாக்க நிஜத்துடன்
போராடும் புரட்சிவித்துக்களே
சாதி மதங்களை துறந்து
தூயிமையான மனதுடன்
புதுமையைதேடும் இலட்சியதின்
ஆணிவேர்களே! தன்மான சிங்கங்களே!
ஒருபோதும் துவலாதீர்கள்,
எதிர்காலத்தின் தூண்களே,
நாம்தான் எதிர்காலம்
நம் இலட்சியம்தான் நம் தேசத்தின் இலட்சியம்!நம்மூச்சிதான் நம் தேசத்தின்மூச்சி!!!!
நம் சிந்தனைதான் தேசத்தின்சிந்தனை!!!!
ஆம்! எதிர்காலத்தை நம் ஒவொரு இதயத்துடிப்பிலும் காணுவோம்
எழுச்சி புரட்சியென நம் சிந்தனையிலும் செயலிலும் வீரமுழக்கமிடுவோம்!!!

எழுதியவர் : எம்.எஸ்.சாஸ்திரி (4-Mar-12, 9:39 am)
சேர்த்தது : M.S.SASTRI
பார்வை : 226

மேலே