அழகுதான்....! இருத்தாலும் ஆபத்து....!

உலகத்தை உள்ளங்கைக்குள்
கொண்டுவரும் குழந்தை....!

ஒவ்வொருவரின் ஆறாம் விரல்....!
ஐந்து அங்குல குழந்தை...!

உறவுகளின் உண்ணதத்தை
உணர்த்தும் உயிர்....!

அழிவின் ஆரம்பமும்,
அன்பின் அடையாளமும்
இந்த ஜீவன் தான்...!

செங்கல், சிமெண்ட் இல்லாமல்
உருவாக்கும் உறவுப் பாலத்தை....!

முன்பு,
செல்வந்தர்களின் செல்லப்பிராணி....

இன்று,
ஏழைக்கும் எட்டும் கனி....!

காதலர்களுக்கு இடையே
தூக்கத்தையும், தூரத்தையும் குறைக்கும்...
துக்கத்தை துரத்தும்....

சில நேரங்களில்,
துன்பத்தை தொலைத்து,
இன்பத்தை அளிக்கும்
இசைக்கருவி....

எழுதியவர் : லோகுசரன்.ஆ (10-Mar-12, 6:21 pm)
பார்வை : 234

மேலே