புதுநெல்லு ! புது நாத்து !

நஞ்சையும் , புஞ்சையும் - நாளை
கொஞ்சி விளையாட

தாமிரபரணி கரை மேலே சேற்றில்
பாதம் பதித்து உடல் வளைந்து

விதை நெல்லை விரல் பிடித்து
ஆழ பதிந்து ஒய்யாரமாய்

ஏழு போகம் விளைய கடவுளை
வேண்டி இங்கே விதைக்கும் விதை

நாளை புது நெல்லாக மகசூல் பெருக
புது நெல்லு ! புது நாத்து !!

-ஸ்ரீவை.காதர் -

எழுதியவர் : காதர் . (27-Mar-12, 7:59 pm)
சேர்த்தது : கவிஇறைநேசன்
பார்வை : 350

மேலே