-----மறத்தமிழினம்-----

-----மறத்தமிழினம்-----

மறத்தமிழ் தாயின் மார்பினிலே
மாவீரம் சுரக்கும்
பால் குடித்தவன் - எம்

பெரும்தமிழ்க் கூட்டம் துயருற்றால்
பேனா எரிந்து
வாள் பிடித்தவன்.

தலைப் போகும் தண்டனைக்குள்ளாகி
தப்பி பிழைக்க உன்
கால் பிடிக்க மாட்டேன்.

தண்ணீர் ஆகாரம் தர மறுத்தாலும்
தற்கொலை செய்து
நான் மரிக்க மாட்டேன்.

--- தமிழ்தாசன் ---

எழுதியவர் : ---தமிழ்தாசன்---- (3-Apr-12, 3:01 pm)
பார்வை : 240

மேலே