ஆண் வர்க்கத் துரோகம்...
நித்தம் நித்தம்
இரத்தம் சிந்தி...!!!
கற்பப்பையிலும்
கால் உதை வாங்கி...!!!
வீரப்பெண்ணாய்
அவமானம் தாங்கி...!!!
ஒவ்வோர் படிக்கும்
உயிரைக்கொடுத்து...!!!
வந்தே மாதரம் என
உரைக்கக்கூறி...!!!
ஆணுக்குப் பெண்
இணையே என்று...!!!
இருவரும் பெற்ற சுதந்திரத்தில்
இன்று பறிக்கப்பட்டது
பெண் சுதந்திரமே...!!!