அம்மா

செருப்பு தேய்ந்தது
அவளது நடையில்,
உடல் தேய்ந்தது
அவள் உழைப்பில்,
அவள் மனது மட்டும்
இன்னும் தேயவில்லை
எல்லாம் எனக்காக,
அவள் சுடுசோறு உண்பதில்லை
எங்கள் மீத உணவு
அவளுக்கு அமுதமாம்,
இது வரை அவளுக்கு
நான் உழைத்ததில்லை
அவளை பெருமையாய் பேசியதில்லை
ஆனாலும்
உள்ளுக்குள் ஒரு உணர்வு
அவள் நினைவை சுமக்கும் ,
எத்தனை சொந்தம் வந்தாலும்
எவ்வளவு சொத்து சேர்ந்தாலும்
அவள் பாசத்தை
எதுகொண்டு அளக்க?
எந்த எழுத்துகளால் எழுத?
இறைவனிடம் ஒரு வரம்
தாயே நீ என் குழந்தையாக
பிறக்க வேண்டும் ,நான்
உனக்காக செருப்பாக
தேய வேண்டும்............

எழுதியவர் : AKNI (3-Apr-12, 3:51 pm)
Tanglish : amma
பார்வை : 259

மேலே