மூன்றெழுத்து மந்திரம்..!!!

நீ பார்க்கும் பார்வை மட்டும்
நெஞ்சுக்குள் இறங்குவதென்ன?

நீ பேசும் வார்த்தை மட்டும்
கவிதையாக மாறுவதென்ன?

நீ சிரிக்கும் ஓசை மட்டும்
சங்கீதமாய் கேட்பதென்ன?

நீ தரும் துன்பம் மட்டும்
இன்பமாய் மாறுவதென்ன?

நீ இல்லா நேரம் கூட உன்
நினைவுகள் என்னோடு பேசுவதென்ன?

தெரிந்தால் சொல்லிவிடு.

இந்த மூன்றெழுத்து மந்திரத்தின்
மாயம் தான் என்ன?

கனவு முதல் நினைவு வரை.
இரவு முதல் விடியல் வரை.
"காதல்" என்ற ஒரு வார்த்தை
என்னை கட்டி போடும் மர்மம் தான் என்ன?

எழுதியவர் : லலிதா.வி (9-Apr-12, 12:20 pm)
பார்வை : 415

மேலே