நட்பா ? காதலா?

நேற்றுவரை தோழியாய் நினைத்தவளை
இன்று ஏன் என் நெஞ்சம் ஏற்க மறுக்கின்றது..
காதல் எனும் கார்மேகம் படைசூழ
என் நட்பெனும் வானம் இருண்டிவிட்டதோ..

என்றுமே பார்க்காத புதுப்பார்வை
இன்று மட்டும் ஏன் உன்மேல் ?...
பலமுறை கைதொட்டு பேசிய போதும்
எதுவும் அறியா என் இதயம்
இன்று ஒரு நொடி தொடுதலுக்காக
ஏங்குவது ஏன் ?..

உன்னை நேரில் பார்த்து நெகிழாத என் கண்கள்
இன்று ஓரக்கண்னால் பார்த்தே ஓய்கிறதே..
என்னுள் பல மாற்றங்கள்
பதில் அறியா பல மாயங்கள்...

நான் நினைப்பதுபோல் நீயும் என்னை
நினைப்பாயா..
இல்லை என்னை கயவன் என எண்ணி
வெறுப்பாயா..

என்னை நண்பனாய் நினைப்பவளை
துணைவியாய் நினைப்பது
நட்பிக்கு நான் செய்யும் துரோகமா...
காதல் வயப்பட்டு கண்ணீரால்
கலங்குகிறேனே இது நியாமா...

உள்ளுக்குள் உன் நினைவுகளால் துடித்து
வெளியில் உன் நண்பனாய் நடித்து
சிறந்த நடிகன் விருது பெற நான்
விரும்பவில்லை...

நட்பு காதல் இவை இரண்டையும்
இழக்க மனமின்றி இழக்கிறேன்
என் "உயிரை"......

எழுதியவர் : கண்ணன் (21-Apr-12, 3:42 pm)
பார்வை : 329

மேலே