அம்மா

நான்
பிறவி எடுக்க
மறுபிறவி
எடுத்தவளே...!
என்னை வளர்க்க
குழந்தையாகி
கூடவே
வளர்ந்தவளே....!
என் கண்கள்
கலங்கியபோதெல்லாம்
கண்ணீர் வடித்தவளே....!
நான் பட்ட
காயத்தின் வலிகளை
கடனாக கேட்டவளே....!
என்
வாழ்க்கை ஒளிவீச
விளக்காக எரிந்தவளே.....!
கடவுள் என
கல்லை -நான்
வணங்கும்போதெல்லாம்..,
கண்ணெதிரே
நின்ற கடவுளே.!!!
உன்னிடம்
நான் வேண்டும்
வரம் கிடைக்குமா
தாயே...????
ஆயிரம் ஜென்மம்
எடுத்தாலும்
என் அன்னையாக
அமையவேண்டும்
நீயே...!!!

எழுதியவர் : vijivanan (25-Apr-12, 12:41 am)
Tanglish : amma
பார்வை : 304

மேலே