சுமைதாங்கும் மனிதன்
எல்லா பறவைகளும்
என்னிடம் தஞ்சம்.
சிலவைகள்
நிழலுக்காக கூடு கட்டிக் கொள்ள ...
சிலவைகள் எச்சமிட்டுச்
செல்வதற்காக...!
யோசித்துக் கொண்டிருக்கிறான்
மனிதன்
என்னை எப்பொழுது
ஜன்னல், கதவுகளுக்கு
பயன்படுத்தலாம் என்று...!