கறிவேப்பிலையாய்

நன்கு வாழ்ந்த
அனுபவசாலிககுத்
தெரியும்
யார் யாரிடத்தில்
எங்கே செல்வது?
யாரைப் பார்ப்பது?
யாரைக் கேட்பது?
என்றும்..

கடல் பயணம்
செல்ல
விமானப் பயணம்
செல்ல
விபத்து நேரிட்டால்
முதலுதவி செய்ய
காவல் நிலையம்
சென்றால்
அவர்களைச் சமாளிக்க
திறம் வாய்ந்த
அனுபவசாலிககுத்
தெரியும்...

ஆனால்...
அனுபவமற்றவனுக்கு
அனுபவசாலியின்
திறமை
தெரியாது...

கோமாளியைப்போல
தேவையானபோது
இவர்கள் உதவி
தேவைப்படும்...

காரண காரியம்
முடிந்தபின்
இவர்கள்
புறக்கணிக்கப்படுவர்
கறிவேப்பிலையாய் !

எழுதியவர் : செயா ரெத்தினம் (1-Jun-12, 10:22 pm)
பார்வை : 227

மேலே