விஞ்ஞானி
பறவையைக் கண்டு
விமானம்
செய்தான் விஞ்ஞானி..
தட்டா னைக் கண்டு
ஹெலி ஹப்டர்
செய்தான் விஞ்ஞானி...
நான் விடும்
தீப்பெட்டி வண்டியை
வைத்தா
ரயில் வண்டி
செய்தான் விஞ்ஞானி...
நான் விடும்
கப்பல் பார்த்தா
கப்பல்
செய்தான் விஞ்ஞானி...
நான் விடும்
ராக்கெட்டைக் கண்டா
ராக்கெட் செய்தான்
விஞ்ஞானி....
நுங்குகளை செய்து
சாலையில்
விட்டதைக் கண்டா
பேருந்தும் காரும்
செய்தான் விஞ்ஞானி....
இத்தனையும் செய்த
விஞ்ஞானியைப்
படைத்தவர்கள் யாரு?
அந்த புண்ணியவான்களின்
பேரு?