வெளிச்சம் ...!

முதுமையின் முகவரிக்குள் ......
இளமையின் முன்னுரை ...!

அனுபவத்தின் பாடலில் ......
ஆரம்பத்தின் தேடல் ...!

தள்ளாடும் வயதிலும் ....
தாலாட்டும் தாயன்பு ...!

தளர்ச்சியின் விரல்களுக்குள் .....
வளர்ச்சிக்கொள்ளும் புதுமலர் ..!

பிஞ்சு காயிற்கு .....
சுவையூட்டும் கனிந்த பழம்...!

ஏழு அதிசயங்களையும் ...
எடுத்து விழுங்கிய எதார்த்தம் ..!

வழிந்தோடும் வாய்க்காலில் ...
வாளைமீனின் வழித்தேடல்..!

வாழ்கையின் வாசலுக்கு ....
நேசத்தின் விலாசம் ...!

இருட்டில் ஏற்றப்பட்ட ..
பாசத்தின் வெளிச்சம் ...!

கலங்காத இதயத்தையும் ...
கரைய வைக்கும் வாழ்க்கை ஓவியம் ..!

இறங்காத இதயத்தையும் ...
இழுத்து நிறுத்தும் இயற்கையின் கவிநயம் ..!

எழுதியவர் : இரா.அருண்குமார் (3-Jun-12, 4:54 pm)
பார்வை : 200

மேலே