காலமெல்லாம் கடன்காரன்..

தெரியாததெல்லாம் எனக்கு தெரிய செய்தீர்
புரியாத பல புதிரை புரிய செய்தீர்
அப்பா வாங்கிய கடன் எல்லாம் அடைத்திடுவேன்
வீட்டு வங்கி கடனையும் அடைத்திடுவேன்..

வட்டிகள் நிறைந்த கடன் அடித்துவிட்டேன்
வட்டிகளின் குட்டியும் அடைத்துவிட்டேன்
பல கடன் அடைத்து பழகிய எனக்கு
ஒரு கடன் அடைக்க வழியில்லை..

வலிகள் நிறைந்த கடன் ஒன்னு பாக்கி இருக்கு
வாழ்க்கையில் வழிகாட்டிய அந்த வலிகளுக்கு
வட்டியுடன் என் கடன் ஒன்னு பாக்கி இருக்கு
கடன் அடைக்க வழி இல்லை.. வழி காட்டு தாயே..

பணத்தால் அடைக்க முடியா கடன் இது
பாசத்தால் அடைத்தால் அடைந்துடுமா என்ன
தாய்ப்பால் கடனடைக்க ஒரு வழி சொல்லம்மா
என்றென்றும் அடைக்க முடியா அன்பு கடனம்மா !!

காலமெல்லாம் கடன்காரன் தான்.. நான்..
ஆனால் கவலை இல்லை இந்த கடனில்..
நூறு ஜென்மம் ஆனாலும்
இந்த கடன் சுமை வரம் கேட்பேன் தாயே...
உன் மகனாய் என்றென்றும் நான் பிறக்க..

எழுதியவர் : கலிபா சாஹிப் (17-Jun-12, 11:26 pm)
பார்வை : 369

மேலே