காதல் வெட்டு
வியர்வை சிந்தி
உனக்காக கத்திருக்கிறேன்
எப்பொழுது நீ வருவாய்
எவ்வளவு நேரம்
என்னுடன் இருப்பாய்
அனல் இரவுகளில்
நீ இல்லாமல்
தூக்கமில்லை
பல வேளை
உணவில்லாமல் கூட
வாழ்ந்திருக்கிறேன்
ஆனால் நீ
ஒவ்வொருவேளையும்
தாமதிக்கும் பொழுதும்
என் சுவாசம்
சுருங்கிவிடுகிறது
நம் உறவுகளை அறுப்பதற்கு
தடையானவர்கள் யார்
நம் விளக்கை
ஊதி அணைக்கும்
உதடு எது
தொட்டுக் கொள்ளும்
விரல் சிநேகிதத்தை
விலகிபோக
விசா எடுத்தது யார்
கரண்ட் காதலியே
காதல் கரண்டில் இருக்க
கூடங்குளமாவது
நம்மை சேர்த்து வைக்குமா
-கவிஞர் அ.அன்பழகன்(பெருமாங்குப்பம்)