காதல் பிரிவு
காதலுக்கு கண் இல்லையாம்
யார் சொன்னது
கண் இருந்தும் காதல் இல்லையே எனக்கு
புவியீர்ப்பு விசையை
கண்டு பிடித்து விட்டார்கள் - ஆனால்
உனது விழி ஈர்ப்பு விசையை ...
என் காதல் புத்தகத்திற்கு
முகவுரைதானே எழுத சொன்னேன்
முடிவுரை ஏன் எழுதினாய் ....
நீ பிரிந்தற்காக வருந்தவில்லை
புரிந்து கொள்ளாமல் சென்றுவிட்டாய்
என்பதுதானே என் வருத்தம்.
பிரிவு என்பது
மறக்க முடியாத சோகம்
கண்ணீரால் நடத்தப்படுகிற யாகம்.