அஞ்சலி செலுத்துங்கள் !

வாழ்ந்தவர் கோடி
மறைந்தவர் கோடி
தான் வரைந்த எழுத்தால்
நம் மனதில் நிற்போர்
சிலரே !

பழக்கங்கள் மாறுமோ
படிக்கும் புத்தகத்தால்
எனும் கேள்விக்கு
மாறும் மாறும் எனத்
தன் புத்தகத்தால்
பதிலளித்தவர்

ஊன்றிப் படி
என் நூலை
உன்னில் மாற்றம்
உறுதியாய்
என உறுதி அளித்தவர்

மேற்கோளாய்
அவரது நூலை
ஆயிரம் ஆயிரம்பேர்
மனமாற்றத்திற்கான
திறவுகோலாய்
அவரது நூலை
நூறு ஆயிரம் பேர்
ஏற்றுக்கொண்ட
வெற்றி பெற்றோரின்
எழு வகைப் பழக்கங்களை
பட்டியலிட்டு புகழின்
உச்சிக்கு ஏறியவர்
ஸ்டீபன் ஆர் கவே
இயற்கை எய்திருக்கிறார் இன்று !

அவரது நூலை
வாசிக்காதவர்கள் அதை
வாசித்து அவருக்கு
அஞ்சலி செலுத்துங்கள் !

எழுதியவர் : வா.நேரு (17-Jul-12, 3:14 pm)
சேர்த்தது : வா. நேரு
பார்வை : 167

மேலே