பிறந்தநாள்..
இந்த இருபத்துஒறு வயதில்..
கடந்து வந்த காதலிகள் எத்தனை..
நடந்து போன திரையரங்கு எத்தனை..
கிடந்து உறங்கிய நண்பன்மடி எத்தனை
எதனை பார்த்தாலும் வாங்கதூண்டும் வயது...
எதிர்பார்த்தே ஏமாந்து போகும் வாழ்க்கை..
எண்ணி எண்ணி சிரிக்கிறேன்..
என்னை நானே நினைக்கிறன்..
தேடி தேடி தேய்வதுதான்
ஓடி ஓடி ஓய்வதுதான்..
ஆடி ஆடி நகர்வதுதான்..
இந்த அர்த்தமற்ற வாழ்க்கை..
எனினும் ஏதேனும் புதுமை தேடும் இதயம்..
விடியழலில்கூட வித்தியாசம் தேடும் மனசு..
குளியலில் இன்னும் குளிர்ச்சி கேட்கும் தேகம்..
மாறுதலாய் ஒரு மாற்றம் கேட்கும் காலம்..
இதோ மீண்டும் வாழ்க்கையோடு..
தேடி தேடி தேயபோகிறேன்..
ஓடி ஓடி ஓயபோகிறேன்..
ஆடி ஆடி நகரபோகிறேன்..