ரமலானே வருக !
மாதங்களில் புனிதமாம்
இந்த மாண்புமிகு ரமலானின்
மேன்மையான நோன்பினை
நேர்மையாக பிடித்து நாம்
திருக்குரானை தினம் ஓதி
தவறாது தராவிக் தொழுது
படைத்த ரப்பிடம் இரு கரம் ஏந்தி
நம் தேவையை நிறைவேற கண்ணீர் சிந்தி
எங்கள் ரப்பே ! எங்களை நேர் வழி நடத்தி
ஈமானை வலுவாக்கி தர
கேட்கின்றோம் துவா உன்னிடம்
எங்கள் நோன்பினை ஏற்று கொள்வாயாக !
ஸ்ரீவை .காதர் .