அழியாத நிழல்கள்……,

மணிமகுடம் சூடிக்கொண்டு
வீர வாளை ஏந்திக்கொண்டு
பண மா(சே)லை உடுத்திகொண்டு
நெற்றியில் ரத்த திலகமிட்டு
உங்களை நாடு காக்கும் கடவுளாய் எண்ணி.......
வீட்டில் உன் படத்தை மாட்டி வைத்து
தலைவன் இருகின்றான் என்று
தம்பட்டம் அடிதுகொண்டேன்.......

கடன் ரத்தாகும்
காவிரியில் தண்ணீர் வருமுனு
நீ சொன்னத நம்பி
நிலத்த உழுது
நீர் பாய்ச்சி
விதை விதைகைலே
உர விலையை ஏத்திடியே

இலவசமாய் மின்சாரம்
கணக்கின்றி வேலைவாய்ப்பு-இது உன் தேர்தல் அறிக்கை
இன்றும்
வாரத்தில் மூன்று நாட்கள்
வேலைவெட்டி இல்லாமல் இருகிறேன் - மின்சார விடுமுறையில்

நீங்க சொன்ன பொய்யை நம்பி
விரலில் மையை வைத்து
மெய்யாக நடந்த
நாங்கள் ஜனநாயகத்தின் மன்னர்களாம்.....
ஆமாம் அமைசர்கள் ஆ(த)ட்டி வைகிறார்கள்
மன்னர்களை.......,

ஒட்டு போட காசு வாங்குன
பாவத்திற்கு .....,
பால் விலை மட்டுமல்ல
பீர் விலையும் ஏத்தியாச்சு ......,
ஏனு கேட்ட கேள்விக்கு

வீட்டுக்கு வீடு
ஆயிரம் ஐநூருனு
ஆளாளுக்கு போட்டிபோட்டு
வாங்குணிகள
அதான் வட்டியொடு வசூலிகிறேன்.........,

செருப்பின்றி ஒட்டு கேட்டவயேல்லாம்
கோட்டைக்கு சென்று
கொடிகளில்
புரள்கின்றான் பண்ணை வீடுகளில் ......,

பெட்டியில் தொடங்கி இயந்திரம் வரைக்கும்
ஓட்டுப் போட்டு
வாழ்வைத் தொலைத்துவிட்டு
கைகளில் பதாகையை ஏந்தி
"விற்பனைக்கு எங்கள் எதிர்காலம்"
பொம்மைகளாய் நிற்கிறோம்.

எழுதியவர் : ப.ராஜா (24-Jul-12, 9:16 pm)
பார்வை : 321

மேலே