பகுத்தறிவு சிந்தனைக்கு ! கவிஞர் இரா .இரவி

பகுத்தறிவு சிந்தனைக்கு ! கவிஞர் இரா .இரவி
இரண்டு கைகளை தலை மேல் வைக்க கூடாது வைத்தால் அப்பா அம்மா இறந்து போவார்கள் .என்பார்கள் .இறுதிச் சடங்கின் போது குடியானவர் இரண்டு கைகளை தலை மேல் வைக்க சொல்வார் .அதனால் ,சாதரணமாக இரண்டு கைகளை தலை மேல் வைக்க கூடாது என்பது மூட நம்பிக்கை.

சாப்பிடும் முன் இலையில் தண்ணீர் தெளிப்பது இலையை சுத்தம் செய்ய ஆனால் சிலர் சிந்திக்காமல் இரவில் சாப்பிடும் போது இலையில் தண்ணீர் தெளிக்க கூடாது என்பது மூட நம்பிக்கை.

சனிக் கிழமை யாரவது இறந்தால் துணை பிணம் கேட்கும் என்பது மூட நம்பிக்கை.இதற்காக வீணாக கோழியை கழுத்து அறுத்து பாடையில் போட்டு விடுவார்கள் .

உயரம் குறைவான நிலையில் குனிந்து போகாமல் முட்டி விட்டு நிலை தட்டி விட்டது .உட்கார்ந்து போங்கள் என்பார்கள் .

பூனை எலியை பிடிக்க ஓடும் .பூனை குறுக்கே போனால் நாம் வெளியே போகக் கூடாது என்பது மூட நம்பிக்கை.
அந்தக்காலத்தில் மின் விளக்கு இல்லாத காலத்தில் ஊசி இரவில் விற்க மாட்டார்கள் .காரணம் தவறி கிழே விழுந்தால் எடுப்பது சிரமம் என்பதால், ஆனால் இன்றைக்கு மின் விளக்குகள் வந்து விட்ட காலத்திலும் சிலர் ஊசி இரவில் விற்க மாட்டார்கள் மூட நம்பிக்கை .

மயில் இறகு குட்டி போடும் என்பார்கள் .மூட நம்பிக்கை .

பரீட்சை எழுதும் பொது விடைத்தாளில் பிள்ளையார் சுழி போட்டு எழுதுவார்கள் .போடு வந்த பழக்கத்தில் அரசு தேர்வில் பிள்ளையார் சுழி போட்டால் திருத்துவோருக்கு நான் யார் என்று அடையாளம் காட்ட போட்டதாக கருதி விடுவார்கள் .அரசு தேர்வில் பிள்ளையார் சுழி போடக் கூடாது

எழுதியவர் : இரா .இரவி (3-Aug-12, 6:18 pm)
பார்வை : 267

மேலே