தீயினர் சுட்டப் புண்

தீயினாற் சுட்டப் புண் உள்ளாறும்
பிறரைத் தீ போல் சுட்ட சொற்கள்
ஆறாத வடுவாய்!
மனதில்
பதிந்து போகக் கூடும்!

அன்பிற்கும் உண்டோ
அடைக்கும் தாழ்
அன்பைப் பேண
அனைவரிடமும்!

மனிதம் வாழ வேண்டுமென்றால்
வள்ளுவம் உரைக்கும்
ஒழுக்கம் விழுப்பம் உடையோர்
வாழ்வு உயிரினும்
மேலாம்!

பிறரைத் துன்புறுத்தாமல்
வாழ்வதே
சான்றோருக்கு அரணாம்
ஆன்ற ஒழுக்கு!

எழுதியவர் : செயா ரெத்தினம் (5-Aug-12, 5:19 pm)
பார்வை : 1147

மேலே