இன்றைய தலைமுறை

முந்தைய தலைமுறை பொதுநலம் நினைத்தது
பிந்தைய தலைமுறை சுயநலம் வளர்த்தது !
இன்றைய தலைமுறை இரண்டும் கலந்தது
நாளைய தலைமுறை கேள்விக் குறியானது !

முன்னும் பின்னும் இரண்டுமே நாம்கண்டது
முள்ளும் மலரும் பாதையாய் கொண்டது !
முன்னோரின் முன்னுரை பாடமாய் இருந்தது
முதியோரின் அறிவுரை ஆற்றலை தந்தது !

பழமை அறிந்திடா இளைய தலைமுறை
பாதை மறந்து போதையில் விழுகிறது !
இருளில் நடந்திடும் இளைஞர் கூட்டமோ
இல்லாத முகவரியை இலககாய் தேடுகிறது !

சாய்ந்திடும் சமுதாயம் நிமிர்ந்து நடந்திட
வீழ்ந்திடும் தலைமுறை விரைவில் விழித்திட
தலைமுறை இடையே இடைவெளி நீங்கிட
வழிவகை வகுப்போம்! மனிதம் காப்போம் !

விஞ்ஞான உலகில் விண்ணையே பார்த்து
கற்பனை உலகில் கனவில் மிதக்காமல்
மண்ணில் வாழ்ந்திட சாதனை புரிந்திட
முறையாக வாழ்ந்து முன்னேற்றம் பெறுக !

என்றும் உங்கள்

எழுதியவர் : பழனி குமார் (8-Aug-12, 3:25 pm)
பார்வை : 694

மேலே