புரியாத உலகம்
வாழ்ந்திடும் வாழ்வோ நிலையில்லை
வாழ்வோர் இதனை உணர்வதில்லை
ஏய்த்திடும் எத்தர்க்கு அளவேயில்லை
ஏங்கிடும் ஆசைக்கு அணையுமில்லை !
பகைமை உணர்வுகள் மறையவில்லை
பழமை மரபுகள்தெரியவில்லை
வாய்மை வாழ்ந்திட வாய்ப்பில்லை
பொய்மை பொய்த்திட வழியுமில்லை !
உதவிடும் உயிர்கள் உயர்வதில்லை
உதறிடும் உள்ளங்கள் குறையவில்லை
பாசமெனும் பூக்கள் மலர்வதில்லை
பரிவெனும் வாசம் அறவேயில்லை !
வறுமைஎனும் புயல் ஒய்வதில்லை
வளமைஎனும் தென்றல் வீசவுமில்லை
உறங்கிடும் உண்மைகள் எழுவதில்லை
உத்தமர் உரைக்கு மதிப்புமில்லை !
என்றுதான் மாறிடுமோ இந்தநிலை
அன்றுதான் அவனியில் இன்பநிலை
மனங்கள் நினைத்தால் செய்திடலாம்
மண்ணில் மாற்றங்கள் நிகழ்ந்திடலாம் !
இதயத்தால் இணைந்து மாற்றிடுவோம்
இல்லங்களில் இன்ப ஒளி ஏற்றிடுவோம் !