வேண்டுவன கொண்டு வா பாரதமே!

மாசில்லா நகரம்
நாடெங்கும் கொண்டு வா..

காசில்லா தண்ணீர்
வீடெங்கும் கொண்டு வா...

அச்சுறுத்தல் இல்லாத
அரசாங்கம் கொண்டு வா...

அழிவே சொல்லாத
அறிவியல் கொண்டு வா..

ஆத்திரம் கொள்ளாத
மனதினை கொண்டு வா...

ஆணவம் கொள்ளாத
மனிதனை கொண்டு வா...

இம்சைகள் தராத
அரசர்கள் கொண்டு வா...

அஹிம்சையின் வழியில்
அமைதியை கொண்டு வா...

ஏழைக்கும் எட்டுகின்ற
ஏடுகள் கொண்டு வா...

பாலைக்கும் நீர் சுரக்கும்
பாக்கியத்தை கொண்டு வா...

யாருக்கும் அஞ்சாத
நேர்மையை கொண்டு வா...

யாரிடத்தும் கெஞ்சாத
ஆண்மையை கொண்டு வா...

எழுதியவர் : யாசர் அரபாத் (16-Aug-12, 2:32 pm)
சேர்த்தது : yazar arafath
பார்வை : 188

மேலே