ஊனமுற்றோகளானோம்
------ ஊனமுற்றோகளானோம் ------
ஒற்றைக்காலில் நொண்டியடிக்கும் - எந்தமிழ்
பற்றை கொண்டுரைக்கும்
தீக்கக்கும் பேனா பிடித்து
தீட்டுகிறேன் ஒரு கவிதை..
பார்வையற்ற தோழனே...
எமக்கோ
கடவுள் என்பவன் கற்பனை உருவம்
உமக்கோ
கற்பனையெல்லாம் கடவுளின் வடிவம்.
நாவிழந்த நண்பனே....
எம் உதட்டு கல்லறைக்குள்
பிணமானதட உண்மை - மொழியுனக்கோர்
இளமொட்டு காகித
பூக்களான பொம்மை.
செவிதிறனற்ற சிநேகிதனே....
கொச்சை வார்த்தைகள் குடியேறிய
கரும்குகையப்பா என் காது.
பச்சிளம் குழந்தையின் முக
புன்னகையப்பா உன் காது.
உண்ண கைகள் இரண்டில்லை. - காலால்
வண்ண ஓவியம் வரைந்தீர்கள்.
மண்ணில் உலவ காலில்லை - ஊன்றி
சின்ன கையால் நிமிர்ந்தீர்கள்.
முன்மொழிய வழியில்லை - செயலில்
மின்னல் போல் இருந்தீர்கள்.
கண் தெரியும் நிலையில்லை - ஊதும்
கண்ணன் குழல் இசைதீர்கள்.
கேட்கும் செவி திறனில்லை - என்றும்
தோற்கா மனமுடன் இருந்தீர்கள்.
தேகமதிலொரு உறுப்பில்லை - வியர்வை
தெறிக்க தெறிக்க உழைத்தீர்கள்.
விழுந்து விழுந்து
மறுபடி
எழுந்து எழுந்து நீங்கள்
மாற்றுதிறனாளியானீர்கள்.
விழுந்து விழுந்து
உள்பிடிமானம்
இழந்து இழந்து நாங்கள்
ஊனமுற்றோர்களானோம்.....
--- தமிழ்தாசன்---