அமாவாசை

அம்மாவாசை
*****
காலையில் எழுந்ததும்
கடமையாக செய்வது

இறந்த பெற்றோரை
நிறைந்த மனதுள் நினைக்கும் நாள்!

எல்லா நாட்களும்
நல்ல நாட்களும் நல்லவையே

இந்த நாளில் மட்டும்
சொந்த நாளாய் நினைகிறேன்

பிள்ளை பருவத்தை
மெல்ல நினைக்கிறேன்

சொல்ல வார்த்தையில்லை
சொல்வதில் வெட்கமில்லை

சின்ன பிள்ளைபோல
சாகும்வரை அன்புடன் இருந்ததை

எப்போதும் உண்மையான
எள்ளளவும் குறையாத அன்பினை

உள்ளமெங்கும் உள்ளதை
உள்ளபடி நினைத்து அழுகின்றேன்!!!

எள் தண்ணியிட்டு
எனது பெற்றோரை நினைத்து

நல் மனதோடு நினைதிட்டு
நாள் முழுதும் விரதமும்

உங்களை நினைத்து
உளமாற நினைக்கும் நாள்


இராம.கண்ணதாசன்
சென்னை

எழுதியவர் : (15-Sep-12, 10:54 am)
சேர்த்தது : கண்ணதாசன்
பார்வை : 118

மேலே