பெற்றோர்கள் சொன்னால் கேட்கனும்...
ஒரு ஊருல ஒரு கருவண்டு இருந்துசாம் அதுக்கு ஒரு சிறிய வண்டு இருந்துசாம் தினமும் காலைல அந்த பெரிய வண்டு இரைதேட அந்த சின்ன வண்ட விட்டுட்டு போகுமாம் போகும் போது அம்மா வரும் வரையில் இங்க தான் இருக்கனும் எங்கயும் போகக்கூடாதுனு சொல்லிட்டு போச்சாம் அம்மா மட்டும் போராங்க நாமும் போய் பார்கலாம்னு அந்த சிறிய வண்டு சொல்பேச்சு கேக்காம போச்சாம் மலர்களுக்குள்ள மட்டும் இருந்த வண்டு உலகத்தப் பார்த்ததும் ஆச்சரியமா இருந்துச்சாம் சந்தோசமா இருந்துச்சாம் அம்மா பாரே நம்மல விட்டுட்டு சந்தோசமா இருக்காங்கனு அம்மா மேலயே கோபம் வந்துச்சாம் போகும் போது ஒரு குளத்தை பார்த்துச்சாம் அதுல அழகான செந்தாமரைப் பூ ஒன்று மெத்தை விரிச்சது போன்று இருந்துச்சாம் அதுமேல இந்த சிறுவண்டு உட்கார்ந்ததும் ஊஞ்சல் ஆடரமாதிரி இருந்துச்சாம் அதிக சந்தோசத்துல இருந்தபோது நேரம் போனதே தெரியலயாம் மாலை நேரம் வந்ததும் சூரியன் வந்துசாம் வந்ததும் அந்த தாமரை பூ சுறுங்கிடுச்சாம் வண்டு வெளியே வரமுடியாம ரொம்ப நேரம் அழுது ரொம்ப கஷ்டப்பட்டு மீண்டும் அழுது அழுது மூஞ்செல்லாம் வீங்கி அங்கயே தூங்கிடுச்சாம் இரவு முழுவதும் சிறு வண்ட கானாமல் தாய் வண்டு அழுதுட்டே தேடிச்சாம் காலை சூரியன் வந்ததும் அந்த தாமரை விரிஞ்சுசாம் அந்த சிறு வண்டு அதுக்குள்ள தூங்கிட்டு இருந்துச்சாம் அப்பரம் தாய் வண்டு வந்து பார்கும் போது தூங்கிட்டு இந்துச்சாம் அத எழுப்பி முத்தம் கொடுத்து வீட்டுக்கு கூட்டிட்டு போச்சாம் அதனால பெற்றேர் சொல்லரது எல்லாமே நன்மைக்குதான் அத கேட்டு நடந்தா வாழ்க்கைல எந்த கஷ்டமும் வரதாது என்பதை உணருகிறேம்.