uஉன்னையே நேசி உண்மையாய் பேசி

இளம் வயதிலேயே

இன்னலை தீண்டியவளே !

இதற்காகவா பிறந்தாய்

இவ்வளவுநாள் வளர்ந்தாய் !

உனக்காக வாழ்ந்திடு


உணர்ச்சியை பகிந்திடு !

ஒரு வருடஇன்பம்

ஒருவருக்கும் திருப்தி இல்லை

கணக்காக நடந்தால்

கண்ணியத்தில் குறையுமில்லை

பிறரருக்காக பார்க்காதே

பிறருக்காக வாழாதே!

இளைமை என்பது

இன்றைய நாள்தான்

இனிமை என்பது

இளமைக்கும் தேன்தான்

இன்றைய வாழ்வை

இனிமையாக்க முயற்சி செய் !

உறவுக்காக இருக்கும்

உன் பிள்ளைகளை நேசி !

இப்போதும் தப்பில்லை

இனிசொல்ல வழியில்லை

மாண்டு போனவனுக்காக

மீண்டும் தப்பு செய்யாதே !

கோழைக்காக நீயும்

கேள்விக்குறியாய் இருந்திடாதே !

நீ தான் நீதிபதி

நின் வாழ்க்கைக்கு அதிபதி

மறுமணம் தப்பில்லை

மறுவாழ்வு கசப்பதில்லை

உருவாக்கு புதுயுகம்

உனைபோற்றும் இந்த உலகம்

துணிந்திடு செயல்பாடு

துயரத்தை வென்றிடு!!!


kaviyazhi.blogspot.கம

எழுதியவர் : கவியாழி.கண்ணதாசன் (26-Sep-12, 1:42 am)
சேர்த்தது : கண்ணதாசன்
பார்வை : 193

மேலே