-----ஊமையாய் செவிடாய் குருடாய் -----

பணம் பேசுவதால் !!!!

பாசமிக்கவன் பைத்தியமாய்,
பண்புள்ளவன் பரதேசியாய் ,
குணமுள்ளவன் குருடனாய் ,
உண்மையானவன் ஊமையாய் ,
செருக்கில்லாதவன் செவிடனாய் ,
சிந்தனையாளன் சிறகொடிந்தவனாய்,
சீர்த்திருத்தவாதி தீவிரவாதியாய்..,

பணம் பேசுவதால்!!!!!

அயோக்கியர் கையில் அரசியல்
அரக்கர்கள் கையில் அறம்
அரசாங்கமும் அரசாட்சியும்
அடக்கமாகி விட்டது
பண பெட்டிக்குள் ............

இனி மனம் பேசட்டும் !!!!!

எழுத்தென்னும் ஏகாந்தத்தை எடுத்து
ஆழ்ந்து சிந்தித்து
அரக்கத்தை ஒழித்து
அறத்தை காக்க
அறப்போர் செய்வோம்
அகிம்சை வழியில் ............

சிந்தித்து வெல்வோம்
சீர்தூக்கி நிறுத்துவோம்
--------பாரதத்தை --------

எழுதியவர் : பிரியாராம் (26-Sep-12, 5:10 pm)
பார்வை : 280

மேலே