காவிரி நதி நீர் - கொந்தளிக்கும் கர்நாடகம்..! கருப்பு சட்டை போராட்டம் நடத்தும் தி.மு.க. வினர்..?! ஈழதேசம் செய்தி..!

தமிழக காங்கிரஸ் பெருச்சாளிகள் கூட்டம் மௌனமாக, அமைதியாக இருக்கிறார்கள். மேலும் தமிழர்களுக்கு கடும் இன்னல் ஏற்படுத்தப்போகும் அணு உலையை திறக்கக் கோரி நாடு முழுதும் சமீபத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். தற்பொழுது அந்தப் போராட்டமும் நடந்து முடிந்து விட்டதால் காவிரி நீர் பிரச்சனையில் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். இன்று கர்நாடகம் முழுதும் கொந்தளித்து விட்டது. பெங்களூரில் இருந்து ஹுப்ளி உடுப்பி என்று கிட்டத்தட்ட அணைத்து பகுதிகளிலும் காவிரி நீரை தமிழகதிற்கு திறந்து விடக் கூடாது என்று, தமிழர்கள் விரோத மனப்பான்மையை டீசலையும் பெட்ரோலையும் ஊத்தி எரிய விட்டுக்கொண்டே இருக்கிறார்கள். கர்நாடக மக்கள் தமிழர்களை அனேகமாக புழு பூச்சியைப் போல பார்க்கும் போக்கு அனேகமாக நிகழ்ந்தேறி வருகிறது.


அதாவது முஸ்லிம் மக்களை எப்படி தீவிரவாதிகளாக, பயங்கரவாதிகளாக பார்க்கும் மன நிலை இந்தியா முழுதும் மாநில மாவட்ட வேறுபாடு இன்றி நிலவுகிறதோ, அவற்றைப் போன்று தமிழக மக்கள் இன்று கிட்டத்தட்ட இந்தியா முழுதும் விரோதிகளாக பார்க்கும் போக்கு தான் இன்று உள்ளது. இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால், சமீபத்தில் திரு வைக்கோ அவர்கள் மத்தியப் பிரதேச சாஞ்சியில் மிகச் சிறந்த மனித நேயம் மிக்க மகிந்தா ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டம் நடத்தினார் சுமார் ஆயிரம் தொண்டர்களுடன், அந்த மத்தியப் பிரதேச மாநிலத்தில் தமிழர்கள் குறித்து என்ன சொன்னார்கள் என்று தெரியுமா..? தமிழர்கள் வட மாநில தலைவர்களை கொல்லுவார்கள் கொலை செய்வார்கள் என்று. அப்படித்தான் ராஜீவ் காந்தியை கொலை செய்தார்கள் என்று மத்தியப் பிரதேச கூட்டு கலவை இனமான அந்த மக்கள் சொன்னார்கள். வட மாநிலத்திற்கு என்றுமே சென்றிராத ம.தி.மு.க. தொண்டர்கள் அதிர்ச்சியில் உறைந்தே போனார்கள். அவ்வாறு மக்களிடம் பரப்பி இருக்கிறது சங் பரிவார் கூட்டம்.


காந்தியை கொன்றது குஜராத்தி மக்கள் என்று ஏன் சொல்லவில்லை..? இந்திரா காந்திய கொன்றது டில்லி யூனியன் பிரதேச மக்கள் என்று ஏன் சொல்லவில்லை. சொல்ல மாட்டார்கள். இந்தியாவில், இந்திய அரசின் முக்கிய அஜண்டாக்களில் ஒன்று தமிழர் விரோதம். அதற்கேற்றவாறு தமிழக அரசியலை மிக உன்னிப்பாக கவனித்து வளர்த்து வருகிறார்கள். இதற்கு யாருமே விதி விலக்கல்ல, காமராசர் தொடங்கி இன்றைய விஜயகாந்து வரை கீழே விழுந்து மண்ணில் புரண்டு உரக்க தேசியம் பேசுகிறார்கள்.


மாறாக, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா அவர்கள் அமெரிக்காவில் இருந்த படியே பிரதமர் மண் மோகன் சிங் அவர்களுக்கு கடிதம் எழுதியதாக செய்தியில் சொன்னார்கள். அமெரிக்காவில் இருந்து கடிதம் எழுதினால் புது டில்லிக்கு வருவதற்கு எப்படியும் ஒரு வாரம் ஆகாது..? மேலும் கடிதம் எழுதும் இந்த கலாசாரத்தை ஊக்குவிக்கிறார்கள் காங்கிரஸ் கட்சியினரும் சங்க்பரிவார் அமைப்புகளும். பிரச்சனைகளை இழுத்து அடிப்பதற்கு இந்த கடித போக்குவரத்து உதவலாம், என்றாலும் எஸ்.எம்.கிருஷ்ணா என்ன எழுதி இருந்தார் அந்த கடிதத்தில்..? வன்முறையை தூண்டிவிடும் சம்பவத்தை உடனே நிறுத்த வேண்டும். தமிழகதிற்கு தண்ணீர் வழங்கக் கூடாது என்கிறார். புது கட்சி துவங்க உள்ள சங்க்பரிவார் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான எடியூரப்பா, எஸ்.எம்.கிருஷ்ணா என்ன செய்து கொண்டிருக்கிறார்..? கர்நாடக மக்களுக்கு எதிராக தமிழக மக்களுக்கு உதவி செய்கிறாரா ..? என்பதை உடனே விளக்க வேண்டும் என்கிறார்..?


எப்படி இருக்கிறது கதை..? தமிழகத்தில் முக்கிய கட்சியான தி.மு.க.வின் தலைவர் மு.கருணாநிதி, கடந்த வாரத்தில் நடைபெற்ற தனது கட்சியின் செயற்குழு கூட்டத்தில், மு.க.ஸ்டாலின் மற்றும் மு.க.அழகிரி இருவரும் கட்சியின் தலைவர்கள். எனது குடும்பத்திற்கு எதிராக யாரும் செயல்படக் கூடாது என்றார். இந்த நிலையில் தான் தமிழக முதல்வர் ஜெ அம்மையார் மு.க. அழகிரியின் வாரிசு துரை தயாநிதியை வலை வீசி தேடி வருகிறது கிரானைட் மோசடி வழக்கில், குண்டர் சட்டத்தில் தூக்கி உள்ளே போடுவதற்கு, இந்த தனது குடும்ப உறுப்பினர்கள் மீது ஜெ அரசின் நடவடிக்கையை, தமிழகதிற்கு இழைக்கப்பட்ட துரோகம் அநியாயம், அநீதி என்று கூறி கருப்பு சட்டை அணிந்து வீடு வீடாக ஜெ அரசின் அடுக்குமுறையை துண்டு நோட்டீஸில் அச்சடித்து விநியோகம் செய்கிறது தி.மு.க என்ற கட்சி.


தனது குடும்பத்தினருக்காக போராடும் தி.மு.க. மறுபுறம் காங்கிரஸ் கட்சியோ, என்னையா... காவிரி கோவேரி..? அவர்கள் தான் தண்ணீர் தர மாட்டேன் என்று சொல்கிறார்களே...பேசாமல் கேட்டுக் கொண்டு போக வேண்டியது தானே. இந்தியாவில் தானே காவிரி ஆறு ஓடுகிறது, பாகிஸ்தானிலா ஓடுகிறது என்கிறார்கள். இடது கம்யூனிஸ்ட் கட்சிகளோ அணு உலையை திறக்காமல் என்னையா...காவிரி பாலாறு..இவையெல்லாம் எதற்கு தமிழனுக்கு..? தமிழன் வெறும் காத்தைக் குடித்து கொண்டே வாழ்ந்து விடுவான்யா..என்கிறார்கள்.


எனவே, மதிப்பிற்குரிய கன்னட மக்கள் ஒன்றை புரிந்து கொண்டு இவ்வாறு தமிழனுக்கு உதவி செய்ய வேண்டும். முதலில் வேதிகா என்ற சங்க்பரிவார் கூட்டத்தையும், காங்கிரஸ் கட்சியினரையும், மற்றும் ஏனைய கர்நாடக கட்சியினரையும் தூக்கி எறிந்து விட்டு, உங்கள் மாநிலங்களில் ஏராளமான சுயாட்சி உரிமையை பறித்துக்கொண்டு மத்திய அரசு உட்கார்ந்து கொண்டு வேடிக்கை மட்டும் பார்க்கவில்லை, நாடு இனம் எல்லை கடந்தது இன்றைய உலகம் என்று சொல்லிக்கொள்ளும் மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கை ஒருபுறமும், மறுபுறம்

இன எதிர்ப்பு மாநில உணர்வுகளை தூண்டி வீட்டுக்கொண்டு இருக்கிறது மத்திய அரசு என்பதை புரிந்து கொண்டு, இழந்த அணைத்து மாநில சுயாட்சி உரிம்மைகளையும் பெறுவது தான் ஆக மிகச்சிறந்த வழி என்று சொல்கிறார்கள் அரிசயல் நோக்கர்கள்.

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (6-Oct-12, 7:49 pm)
பார்வை : 202

சிறந்த கட்டுரைகள்

மேலே