காவிரி தமிழகத்தின் உயிர் பிரச்சனை..? செப்புகிறார் திருமா..!

காவிரி நீரில் தமிழகத்துக்கான உரிமையை நிலை நாட்டினால் மட்டுமே தமிழகத்தின் உணவு உற்பத்தியை பாதுகாக்க முடியும். காவிரி தமிழகத்தின் உயிர் பிரச்சனை என்று உரத்து செப்பினார் திருமா அவர்கள்.

மேலும் கூறுகையில், கர்நாடகத்தில் ஒரு பிரச்சனை என்றால் அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து விடுகிறது. ஆனால் தமிழகத்தில் தான் இது போன்ற ஒற்றுமை இல்லை. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும் பிற அமைப்புகளும் இன்னும் இந்த பிரச்சனையில் கவனம் செலுத்தவில்லை என்று கஷ்டப்பட்டு பாரம் சுமந்தார் திருமா அவர்கள்.

காவிரி நீரில் தமிழகத்துக்கான உரிமையை நிலைநாட்டினால் மட்டுமே, தமிழகத்தின் உணவு உற்பத்தியை பாதுகாக்க முடியும் என்றார். இதில் ஏதாவது அர்த்தம் உள்ளதா..? என்றெல்லாம் யாரும் பார்க்க மாட்டார்கள் என்ற நினைப்பில் இவ்வாறு கூறியுள்ளார் திருமா அவர்கள்.

கர்நாடக மக்கள், கேரளா மக்கள், ஆந்திர மக்கள் இதுவரை திராவிடம் என்று பேசிய அரசியல் தலைவர்களை பார்க்கவில்லை என்று இருக்குமோ..? திருமதி மாயாவதி அவர்கள், இந்திய தேசியம் பேசவில்லை..அவ்வாறு பேசி இருந்தால்.இவ்வாறு இருந்திருக்குமோ.? தலித்துகள் முன்னேற்றமே எனது ஒரே கொள்கை..பிறகு தான் இந்திய தேசியம் .? என்று.

தேசியத்தை....! தலித்தியம் முன்னிறுத்துவது அணைத்து திராவிட கட்சிகளை விட மிக உயர்ந்த நிலையில் என்று சொல்கிறார்கள். எனவே தான் கும்பிடுறேன் சாமி.... என்ற அளவிற்கு முதுகு தண்டு ஒடிந்து விடும் அளவிற்கு நிற்கின்றன தலித்துகளை வைத்து பிழைப்பு நடத்தும் அரசியல் கட்சிகள் என்று கருதலாமா..?

என்ற நிலையில் தமிழகத்தில் உள்ள அணைத்து கட்சிகளும் ஒரே நிலையில் நிற்க வேண்டும், ஒற்றுமை இல்லை..என்கிறார் திருமா அவர்கள். இவ்வாறு சொல்வதற்கு வெறும் வார்த்தை தானே...காசா பனாமா..? என்று இருக்குமோ..!

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (7-Oct-12, 9:52 pm)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 132

மேலே