என்னவளின் வரவிற்காக

என் வீட்டு வாசல்படி
ஏக்கத்துடன் தவம் கிடக்கிறது!!!!!!!
என்னவளின் வலது காலை
இதமாய் தாங்கி பிடிப்பதற்காக..................

அம்மிக்கல்லும் அடம் பிடிக்கிறது
நன் மெட்டியிடும் அவள் கால்
விரல்களை மெதுவாய் தொடுவதற்காக........

குத்து விளக்கோ சத்தமில்லாமல்
சண்டை போடுகிறது காற்றுடன்!!!!!
அவள் ஏற்றும் தீபத்தை மட்டும்
அணைக்க விடமாட்டேன் என்று...............

இவைகளோடு நானும்தான்
காத்திருக்கிறேன் நாளும்---------------
மாலை சூடி மருமகளாய் அவளை
என் வீட்டிற்கு கொண்டு செல்ல...........

எழுதியவர் : முகவை கார்த்திக் (15-Oct-12, 1:47 pm)
சேர்த்தது : karthikboomi
பார்வை : 213

மேலே