முடிவில்லா பயணம்
பாவம் ஒன்றல்ல இரண்டல்ல
ஒராயிரம் செய்திருப்பான்
தமிழன் போலும் ......
உரிமைகளையும், உடமைகளையும்
உறவுகளையும் இழந்து
தனியாக தான் தமிழன் தவிக்கிறான்
தாயக மண்ணில் ......
கேட்பதற்கும் கொடுப்பதற்கும்
நாதி இல்லை .......
விதி இதுதான் என்று சதி
செய்யப்பட்டதா அல்லது
சதியே விதியாக மாற்றி அமைக்கப்பட்டதா?????
விடையில்லா கேள்விகளோடு
எம் தமிழ் இனத்தின்
வாழ்க்கை பயணம் தொடர்கிறது
முடிவில்லா பயணமாக .........................
பாரதி ........