பிராத்திப்போம்

---- பிராத்திப்போம் ----

முதல் இரவு முடிந்த பொழுதோடு
மூட்டை கட்டி புறப்பட்டு
இடுப்பு வலியால்
துடித்த மனைவியின் செய்தி கேட்டு
விடுப்புக்கு முறையிட்ட
ஒரு வீரனின் சடலம்
எல்லையில் மீட்கபட்டது....

அவன் பிணத்திடம்
யார் போய் சொல்லுவது...
அவன் விந்துக்கு
பிறந்த குழந்தை
இறந்து விட்ட செய்தியினை...

வயது இருபது கடக்காத
வீரனின் இளம் துணைவி
பிரசவம் முடிந்து
இன்னும்
கண் திறக்கவில்லை.

அவள் கருவுற்ற நாள் தொட்டு
சந்தேகிக்கும் தெரு மக்கள்
சமாதானம் அடைய
பிராத்திப்போம்....


---- தமிழ்தாசன் ----

எழுதியவர் : ---தமிழ்தாசன்---- (19-Oct-12, 12:08 pm)
சேர்த்தது : தமிழ்தாசன்
பார்வை : 118

மேலே