ஓலைப்பதிவுகள்

ஆற்றுப் பெருக்கு
அடி சுடும் அந்நாளில்
மணல் திருட்டு.

தொட்டனைத்தூறும் மணற்கேணி
ஊழல்.

வெள்ளத் தனைய மலர் நீட்டம்
விலைவாசி.

யானை வெரூஉம் புலிதாக்குறின்
கூடங்குளம்.

ஓடுமீன் ஓட உறுமீன்
வரும் வரைக்கும்
வாடி நிற்குமாம் கொக்கு
அந்நிய முதலீடு.

எருது நோய்
காக்கைக்கு தெரியுமா
பாராளுமன்றத்தில் லோக்பால்.

எழுதியவர் : சிந்தா (20-Oct-12, 1:20 am)
பார்வை : 217

மேலே