காதல்
என்ன பேசினோம் இத்தனை நாட்கள்
உதடுகள் உலரும் வரை ....!
வார்த்தைகள் இல்லாத வாக்கியங்களாய்
சில நாட்கள் பேசினோம்....!
கண்ணீராக மட்டுமே சில
நாட்கள் பேசினோம்....!
சந்தோஷமாக சில நாட்கள் பேசினோம்
கோவமாக சில நாட்கள் பேசினோம்....!
வருத்தமாய் சில நாட்கள் பேசினோம்....!
எத்தனை நாட்கள் கழிந்தாலும்-வார்த்தைகள்
மட்டும் இன்னும் முடியவில்லை
மௌனத்திலும் கூட
நம் காதல்
வளர்கிறது நம்மிடையே இ(எ)ன்றும்....!