ஊடல்

வினாக்களின் விடைகளில்
ஒழித்துவைக்கிறாய்!
ஒற்றை வரிக் கவிதைகளை!

எபோதும் இதழ் பிரிக்கையில்
வலைவிரிக்கிறாய்!
என் வார்த்தைகொண்டே
வடம் பிடிக்கிறாய்!

செல்லமாய் நீ பிடிக்கும் சண்டைகளை
தொகுத்து வழங்க
என் நேரம் போதாதடி!

சகியே
உன் பரிதாபத்தில்
மட்டுமே என் வெற்றிகள்
விரிகின்றன!
சிலநேரங்களில்
உன் ஆழ்ந்த மௌனங்களில்
தோற்கிறேன்
என் வீம்பை!

எழுதியவர் : சரவணா (26-Oct-12, 7:28 pm)
சேர்த்தது : ksk2020k
பார்வை : 144

மேலே