நாய் பாசம்..

பசியில் துடித்து
கையேந்தி
வயிறு நிரப்ப கூசி
தண்டவாளத்தில்
தலை வைத்து
கதை முடித்து கொண்டாள்
தாயொருத்தி...

பூச்சி மருந்து வாங்கக்கூட
காசு கொடுத்தனுப்பாத
தலைமகனுக்கும்
தகவல் சொல்ல தேடியபோது

"நோயுற்ற நாயை தூக்கி
வைத்தியம் பார்க்க போனவர்
வரவில்லை..."
வாசலை தாண்டி
வந்தது விழுந்தது
மனைவியின் குரல்....

நகரமையமாக்குதலில்
வளர்ந்திருக்கிறது
நாய் பாசம்..


---தமிழ்தாசன்----

எழுதியவர் : தமிழ்தாசன் (29-Oct-12, 6:52 pm)
பார்வை : 245

மேலே