குறும்பா (7 ) சிரிப்பு

மரணத்தை
தள்ளிப் போடும்
மாமருந்து.!

உள்ளத்தில் வேர் விட்டு
உதட்டில் மலரும்
உயிர்ப் பூ.!

மிருகத்தின் முகத்தில்
மனிதச் சாயம் பூசும்
மகத்தான ஓவியம்.!

கண்கள் பார்க்க
காதுகள் கேட்க
உணர்ச்சிகள் எழுதும்
உதட்டுக் கவிதை.!

ஆன்ம தேகத்தில்
ஆனந்தம் தொடும்
ஆலிங்கனம்.!

எழுதியவர் : அலிநகர். அஹமது அலி. (6-Nov-12, 7:37 am)
பார்வை : 237

மேலே