வருக..வருக..

அனைவரும் 29.11.2012-ல் நடை பெற உள்ள விழாவிற்கு வருக..வருக..அன்று நமது முதல் தொகுப்பு ,எனது மகள் காயத்திரியின் மணவிழாவின் பொழுது ,வெளியிடப்பட உள்ளது...கூடவே தோழர் அபியின் ஆதலினால் காதலித்தேன் எனும் நூலும் வேறு இரண்டு நூல்களும் வெளியிடப்பட உள்ளன..
தளத்தில் நான் புதுவை காயத்திரியாய் இருந்து (தோழர் நிலா சூரியன் நடாத்திய கவிதைப் போட்டியின் போது ) அறிவித்த அறிவிப்பு அகன் எனும் உரு எடுத்து முடித்துள்ளேன்...மனம் நிறைந்தது..
இந்நேரத்தில் அன்று என்னுடன் குரல் எழுப்பிய தோழர் இரா.அருண்குமார் என் நன்றிக்கும் நினைவுக்கும் உரியவர்...

எழுத்து.காம் நிர்வாகிகள் என் நன்றிக்குரியோர்.
தளத்தின் முதல் தொகுப்பு எழுத்து.காம் பற்றிய நன்றியறிதலோடு வெளியிடப்பட உள்ளது என்பதே அவர்கட்கு சிறப்பு.

அன்புடன்
புதுவை காயத்திரி என்ற அகன்

எழுதியவர் : புதுவை காயத்திரி (எ )அகன் (8-Nov-12, 11:51 pm)
பார்வை : 286

மேலே